ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவுவதாகக்‍ கூறும் மத்திய அரசு அங்கு எதிர்க்‍கட்சிகளை அனுமதிக்‍காதது ஏன்? - காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கேள்வி

Aug 24 2019 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுவதாகக்‍ கூறும் மத்திய அரசு, அங்கு எதிர்க்‍கட்சிகளை அனுமதிக்‍க மறுப்பது ஏன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மக்‍களவை எம்.பி. ராகுல்காந்தி தலைமையிலான எதிர்க்‍கட்சி தலைவர்கள், ஜம்மு காஷ்மீருக்‍கு இன்று பயணம் மேற்கொள்கின்றனர். குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் ஸ்ரீநகருக்குச் செல்கின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜம்மு-காஷ்மீர் அரசு, மக்களின் உயிரும், நாட்டின் அமைதியும் முக்கியம் என்பதால், அதனை உணர்ந்து, எதிர்க்‍கட்சி தலைவர்கள், காஷ்மீர் வரும் எண்ணத்தை கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் துணை ராணுவப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுவதாகக்‍ கூறும் மத்திய அரசு, அங்கு எதிர்க்‍கட்சிகளை அனுமதிக்‍க மறுப்பது ஏன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார். இது மிகப்பெரிய முரண் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00