வழக்‍கறிஞராகத் தொடங்கி உயர் பதவிகளை வகித்து நாட்டிற்கு பணியாற்றியவர் அருண்ஜேட்லி - தலைவர்கள் புகழாரம்

Aug 24 2019 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

அருண் ஜேட்லி மறைவுக்‍கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள பிரதமர் திரு. மோடி, திரு. அருண் ஜேட்லியின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தேசத்தைக் கட்டியெழுப்பியதில் மகத்தான பங்களிப்பை வழங்கியவர் ஜேட்லி எனவும், அவரது மறைவு பொது வாழ்க்கையிலும், அறிவுசார் சுற்றுச்சூழல் அமைப்பிலும் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

மதிப்புமிக்‍க நல்ல நண்பரை இழந்துவிட்டதாக பிரதமர் திரு. மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாட்டின் எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் முன் நின்றவர் ஜேட்லி என்றும், பல மகிழ்ச்சிகரமான நினைவுகளுடன் நம்மை விட்டு சென்றுவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த வழக்கறிஞருமான திரு. ஜேட்லி, அனைத்து கட்சியினரிடமும் பாராட்டை பெற்றவர் என்று மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். ஜேட்லியின் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அருண் ஜேட்லியின் மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருந்துவதாகவும், அவரது குடும்பத்தினருக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், காங்கிரஸ் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்‍கத்தில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00