நீதிமன்றத்திற்கு மூத்த வழக்கறிஞர் உடையில் வந்த ப.சிதம்பரம் : செப். 28-ந் தேதி நேரில் ஆஜராக இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ்

Aug 25 2019 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீதிமன்றத்திற்கு மூத்த வழக்‍கறிஞர் உடையில் வந்த விவகாரத்தில், ப.சிதம்பரம் செப்டம்பர் 28-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்துக்கு டெல்லியை சேர்ந்த ஜே.கோபி கிருஷ்ணன் என்பவர் கடந்த ஜனவரி 19-ந் தேதி அனுப்பிய புகாரில், ப.சிதம்பரமும், அவருடைய மனைவி நளினி சிதம்பரமும் கடந்த ஜனவரி 11-ந் தேதி, முன்ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணைக்கு மூத்த வழக்‍கறிஞர்கள் அணியும் உடை அணிந்து நீதிமன்றத்திற்கு வந்தனர் என்றும், இது மூத்த வக்கீல் என்ற பதவியை துஷ்பிரயோகம் செய்வதாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது நெறியற்ற செயலாகும் என்பதால், இந்த விதிமீறலுக்காக இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த புகாரை உச்சநீதிமன்ற துணைப்பதிவாளர் கடந்த மே 31-ந் தேதி இந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தார். இதனை பரிசீலனை செய்த இந்திய பார் கவுன்சிலின் சிறப்புக்குழு, ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் மற்றும் புகார்தாரர் ஜே.கோபிகிருஷ்ணன் ஆகியோர், அடுத்த மாதம் 28-ந் தேதி காலை 11.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00