சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் 4 தொகுதிகளில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Aug 25 2019 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு, செப்டம்பர் 23 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின், தண்டேவாடா, கேரள மாநிலத்தின் பலா, திரிபுரா மாநிலத்தின், பாதர்காட், உத்தரப்பிரதேச மாநிலத்தின், அமிர்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு, செப்டம்பர் 23 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்குவதாகவும், வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், செப்டம்பர் 4-ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு பரிசீலனை, செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள், செப்டம்பர் 7-ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23 ஆம் தேதி, வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள், செப்டம்பர் 27 ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.