பினராயி விஜயனுக்கு ராகுல்காந்தி கடிதம் : வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை ஒரே இடத்தில் வழங்க கோரிக்கை

Aug 25 2019 6:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் வெள்ளத்தால் ஆவணங்களை இழந்துள்ளவர்களுக்கு ஒற்றை சாளர முறையில் ஆவணங்களை அளிக்க வழிவகை செய்ய வேண்டுமென கேரள முதலமைச்சர் திரு.பினராய் விஜயனுக்கு வயநாடு எம்.பி. திரு.ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் வயநாடு, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராகுல்காந்தி கேரள முதலமைச்சர் திரு.பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், வெள்ளம் பாதித்த தனது தொகுதியில் வசிக்கும் மக்கள், கல்விச் சான்றிதழ்கள், பதிவு ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழந்துள்ளதாகவும், இதனை மீண்டும் பெற பல அலுவலகங்களுக்கு அலைய வேண்டி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு ஆவணத்தை பெறுவதற்கும் வெவ்வேறு அலுவலகங்களை நாடுவதற்கு பதில், ஒரே இடத்தில் அனைத்தையும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அக்கடிதத்தில் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00