புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது - ஆளுநர் உரைக்கு பிறகு அவை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு
Aug 26 2019 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் உரையுடன் தொடங்கியது. ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
யூனியன் பிரசேதமான புதுச்சேரியில், இன்று, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின், அவரை, சபாநாயகர் சிவக்கொழுந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பட்டெஜ் கூட்டத்தொடருக்கு, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, தன் உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது, அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் திரு. அன்பழகன், கடந்த 3 ஆண்டுகளில், அரசு எதுவுமே செய்யவில்லை என்றுக் கூறி, வெளிநடப்பு செய்தார். அவருடன், பிற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.
துணை நிலை ஆளுநரின் உரைக்கு பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச முற்பட்டபோது, அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.