முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா? : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை

Aug 26 2019 8:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது. உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்‍கல் செய்த முன்ஜாமின் மீதான மேல்முறையீடு வழக்‍கு, இன்று விசாரணைக்‍கு வருகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஐந்து நாள் சிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது, காவல் நீட்டிப்பு கேட்டு சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்ததற்கு எதிரான மூத்த வழக்‍கறிஞர் கபில் சிபல் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

இதனிடையே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுத்து, டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்‍க உள்ளது. சிபிஐ காவலுக்கு அனுப்பி, சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணையும் நடைபெறவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00