ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
Aug 26 2019 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ள பிரதமர் மோடி, முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் "ஜி-7" எனப்படும் வளர்ந்த பொருளாதாரத்தை உடைய ஏழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் திரு.நரேந்தி மோடி பங்கேற்க வேண்டும் என ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று இம்மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பாரிஸ் வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு.மோடி, கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவ், சீன அதிபர் ஜீ ஜின்பிங், ஜப்பான் பிரதமர் அபே, உள்ளிட்ட பல்வேறு நாட்டு அதிபர்களை சந்தித்தார். ஜி-7 நாடுகளின் மாநாட்டின் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் டிரம்பை, இன்று மோடி சந்தித்துப் பேச உள்ளார்.
முன்னதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து, பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது