ஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர்

Sep 5 2019 7:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திராவில் 74 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தக்‌ஷராமம் பகுதியை சேர்ந்தவர் ராஜா ராவ். இவருக்கும் மங்கம்மா என்பவருக்கும் கடந்த 1962-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லை. முயற்சியை கைவிடாத மங்கம்மா தம்பதியினர் 2018-ம் ஆண்டு குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்‍காக சேர்ந்தனர். மங்கம்மாவின் உடல் நிலையை ஆய்வு செய்த மருத்துவர்கள், குழந்தை பெற்றெடுப்பதற்கான முழு உடல் தகுதி பெற்றிருப்பதை உணர்ந்தனர். இதையடுத்து, ஜனவரி மாதம் ஐவிஎஃப் மூலம் செயற்கை கருவூட்டல் நிகழ்த்தப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மங்கம்மா தனது 74-வது வயதில் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளை இன்று பெற்றெடுத்தார். தனது 74-வது வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததன் மூலம் அதிக வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண் என்ற கின்னஸ் சாதனையை மங்கம்மா நிகழ்த்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00