இந்தியாவின் பன்மொழித்தன்மை பாரதத்தாயின் பலவீனம் அல்ல - ஹிந்தி மொழி குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு ராகுல்காந்தி பதில்
Sep 16 2019 8:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் பன்மொழித்தன்மை பாரதத்தாயின் பலவீனம் அல்ல என வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தேசிய இந்தி தினத்தையொட்டி, திரு. அமித்ஷா வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் எனவும், பல்வேறு மொழிகளை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், அவரவர் தாய்மொழியுடன், மக்கள் இந்தியையும் கற்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு.ராகுல்காந்தி, இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளையும் குறிப்பிட்டு, பன்மொழித்தன்மை என்பது பாரதத்தாயின் பலவீனமல்ல என குறிப்பிட்டுள்ளார்.