கர்நாடகாவில் கன்னடமே முதன்மையான மொழி - டுவிட்டரில் முதலமைச்சர் எடியூரப்பா கருத்து
Sep 16 2019 8:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலத்தில், கன்னட மொழியே முதன்மையானது என்றும், அதன் முக்கியத்துவத்தில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்என்றும் அம்மாநில முதலமைச்சர் திரு. பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
தேசிய ஹிந்தி மொழி தினத்தையொட்டி, நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான திரு. அமித் ஷா தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு, பல தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க., மூத்த தலைவரும், கர்நாடக முதலமைச்சருமான, திரு.பி.எஸ்.எடியூரப்பா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாட்டின் அனைத்து அதிகாரபூர்வ மொழிகளும் சமமானவை என்றும், கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை, கன்னடமே முதன்மையான மொழி என்றும் கூறியுள்ளார்.
கன்னட மொழி முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம் என்றும், மாநிலத்தின் கலாச்சாரத்தையும், கன்னட மொழியையும் மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.