உள்நாட்டு பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் அழிந்துவிடும் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேச்சு : சர்வதேச சமுதாயத்தால் பாகிஸ்தான் பல நிலைகளில் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டதாக கருத்து
Sep 17 2019 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் என மத்திய அமைச்சர் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் நடைபெற்ற தேச ஒற்றுமை பிரச்சாரத்தில் பேசிய அவர், பாகிஸ்தானின் நண்பர்களான பயங்கரவாதிகளும், ஐ.எஸ்.ஐ. உளவு பிரிவும் இந்திய முஸ்லிம்களின் தேசபக்தி பற்றி கேள்வி எழுப்பும் சதிச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்தியாவில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாதம் வேரூன்ற முடியாமல் போனதற்கு, இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று தான் காரணம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்திய முஸ்லிம்கள் அமைதி, சகோதரத்துவம், மனிதநேய பாதையில் செல்பவர்கள் என்றும், பாகிஸ்தான் தனது மண்ணில் பயிற்சி அளித்துவரும் பயங்கரவாத தீய சக்திகளாலேயே அழிந்துவிடும் என்றும் கூறினார். சர்வதேச சமுதாயத்தால் பாகிஸ்தான் பல நிலைகளில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.