மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தயார் - நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மக்களிடம் செல்வோம் என காங்கிரஸ் அறிவிப்பு
Sep 22 2019 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல்களை சந்திக்க தயார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில், அடுத்த மாதம் 21 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலங்களுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. பவன் கெரா, மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல்களை சந்திக்க, காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றும், வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை, விவசாயிகளின் துயரங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் அடிப்படையில், இந்த தேர்தல்களை சந்திப்போம் என்றும் கூறினார்.
பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் இருந்து மத்திய அரசு மக்களை திசைத்திருப்புவதாகக் கூறிய அவர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க., ஈடுபடுகிறது என்றும், இரண்டு மாநில சட்டப்பேரவை தேர்தலில், பா.ஜ.க.,வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.