பின்லாந்து சென்றார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் : பின்லாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை
Sep 22 2019 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு முறைப் பயணமாக பின்லாந்து சென்றுள்ள, வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர், பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
3 நாட்கள் அரசு முறைப் பயணமாக, பின்லாந்து நாட்டுக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் சென்றுள்ளார். அந்நாட்டு தலைநகர் ஹெல்சிங்கியில், பிரதமர் ஆண்ட்டி ரினி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ ஆகியோரைச் சந்தித்து, அமைச்சர் திரு. ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர், இந்தியாவின் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது என்றும், பயங்கரவாதத்தால், இந்தியா பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது என்றும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் நன்மைக்காகவே இந்தியா குரல் கொடுக்கிறது என்றும் கூறினார்.