வந்தே மாதரம்முழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்தியாவில் வசிக்க எந்த உரிமையும் இல்லை - மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி சர்ச்சைப் பேச்சு
Sep 22 2019 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வந்தே மாதரம்முழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்தியாவில் வசிக்க எந்த உரிமையும் இல்லை என மத்திய அமைச்சர் திரு. பிரதாப் சந்திர சாரங்கி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ஒடிஷா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில், ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்துரத்த செய்யப்பட்டது குறித்து, ஜன் ஜாக்ரன் சபா என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பாரதிய ஜனதாவை கடுமமையாக எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மட்டும் கண்டனம் தெரிவிப்பதாக குற்றம் சாட்டினார். அரசமைப்புச் சட்ட 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து மனித உரிமைகள் மீறப்படுவாக கூறப்படுவதை சுட்டிக்காட்டிய மத்திய கால்நடை வளர்ப்பு மற்றும் குறு சிறு தொழில்துறை அமைச்சர் திரு. பிரதாப் சந்திரசாரங்கி, காஷ்மீரில் கண்ணி வெடித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது பயங்கரவாத ஆதரவாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் மீட்டுக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். வந்தேமாதரம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த நாட்டில் வசிப்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் திரு. சாரங்கி தெரிவித்தார்.