காஷ்மீர் பிரச்னைக்காக 3 தலைமுறைகளாக பா.ஜ.க. அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறது - அமித்ஷா பேச்சு
Sep 22 2019 6:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராகுல் காந்தி தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளதாகவும், பாஜக மூன்று தலைமுறைகளாக காஷ்மீர் பிரச்சினைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் திரு. அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே 370 வது சட்டப்பிரிவை பிரதமர் திரு.நரேந்திரமோடி நீக்கியுள்ளார் என்றும், பிரதமரின் துணிச்சல் மிகுந்த செயலுக்காக அவருக்கு தனது பாராட்டுகள் என கூறினார். மேலும் காஷ்மீர் விவகாரத்தை பா.ஜ.க அரசியலாக்குவதாக ராகுல் காந்தி கூறியுள்ளதற்கு பதிலளித்த அவர், ராகுல் தற்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளதாகவும், பா.ஜ.க. 3 தலைமுறைகளாக காஷ்மீர் விவகாரத்தில் தங்களை அர்ப்பணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 1947ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, தாக்குதலுக்கு உத்தரவிட தாமதப்படுத்தியபோதிலும், நமது வீரர்கள் பாகிஸ்தானுடன் கடுமையாக போராடியதாக அமித்ஷா கூறினார்.