ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மனித உரிமை மீறல்களை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் அந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை
Sep 22 2019 6:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் அத்துமீறினால், அந்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், 370 வது சட்டப்பிரிவு காஷ்மீரில் ரத்தம் சிந்தும் நிலையை உருவாக்கியதாகவும், அங்குள்ள பலரின் கனவு தற்போது பிரதமர் நரேந்திரமோடியால் நிறைவேறியுள்ளதாகவும் கூறினார். இதேபோன்று இந்த சட்டப்பிரிவு காஷ்மீரில் தீவிரவாதத்தை உருவாக்கியதாகவும், இந்த தீவிரவாதம் காஷ்மீரை ரத்தம் சிந்தும் பூமியாக மாற்றியுள்ளதாகவும் கூறினார். மேலும் பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அவர்கள் திரும்ப போகமாட்டார்கள் என கூறிய அவர், ஆக்கிரமிப்பு காஷ்மிர் விவகாரத்தில் பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டால், அந்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என பேசினார்.