டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் கொள்ளை : திருடர்களுக்கு போலீசாரை கண்டு பயமில்லை
Sep 23 2019 6:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் திரு. சத்யேந்தர் ஜெயின், தனது வீட்டிலிருந்து ஏராளமான பொருட்கள் திருடு போயுள்ளதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த திரு. சத்யேந்தர் ஜெயின், டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். உள்துறை, மின் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அமைச்சகங்களையும் அவர் கவனித்து வருகிறார்.
டெல்லியில் உள்ள சரஸ்வதி விகார் என்ற இடத்தில், 6 மாதங்களாக பூட்டிக்கிடக்கும் தனது வீட்டில் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக திரு.சத்யேந்தர் ஜெயின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
டெல்லி போலீசார் மீது திருடர்கள் உட்பட யாருக்கும் பயமில்லை என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.