உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
Sep 23 2019 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ராமசுப்பிரமணியன், பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ரவீந்திர பட் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ரிஷிகேஷ் ராய் ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்காக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதில், நீதிபதி திரு.ராமசுப்பிரமணியன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்த 4 பேரின் நியமனத்துக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தையடுத்து, நால்வரும் இன்று உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.