தேசிய குடியுரிமை பதிவேட்டை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்

Sep 23 2019 6:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய குடியுரிமை பதிவேட்டை மேற்கு வங்கத்தில் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் செல்வி.மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் வெளியான தேசிய குடியுரிமைக்கான இறுதிப் பட்டியலில் இருந்து 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட பீதியினால், மேற்கு வங்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து, கொல்கத்தாவில் நடைபெற்ற வர்த்தக கூட்டத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் செல்வி.மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் தேசிய குடியுரிமை பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் எனவும், தன் மீது நம்பிக்கை வைக்கும் படியும் மக்களிடம் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயகத்திற்கு போராட்டங்கள் முக்கியம் என தெரிவித்த அவர், போராட்டங்கள் வலுவிழக்கும்போது, இந்தியா இந்தியாவாக இருக்காது எனவும் தெரிவித்தார். நாட்டின் சில இடங்களில் ஜனநாயகம் என்பது இல்லாத நிலையில், மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இன்னும் உள்ளது எனவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00