தண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்கவைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்
Oct 12 2019 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தை உணர்த்தும் வண்ணம், குரங்கு ஒன்று செய்த அதிசய செயல் குறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பொதுவாக பலரும் தண்ணீர் குழாய்களை திறந்துவிட்டு தண்ணீரை பெருமளவில் வீணாக்கி வருகின்றனர். மேலும் பல இடங்களில் குழாய்கள் பழுதடைந்து தண்ணீர் வீணாகிறது. இதேபோல், குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதைக் கண்ட குரங்கு ஒன்று, அந்த குழாயை, காய்ந்த சறுகுகள் கொண்டு அடைத்து தண்ணீரை வெளியேறாமல் தடுத்தது. இந்த அதிசய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.