ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது - உள்ளூர் ஆயுதங்களைக் கொண்டு எந்தவொரு போரையும் வெல்வோம் என ராணுவத் தலைமைத் தளபதி உறுதி
Oct 15 2019 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் உதவியுடன், எந்த போரையும் வெல்வோம் என ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழக இயக்குனர்களின் 41வது ஆண்டு மாநாட்டில் பேசிய அவர், நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து வெளிநாடுகளில் இருந்துதான் ஆயுதங்களை இறக்குமதி செய்து வந்ததாகவும், மிகப்பெரிய ஆயுதக் கொள்முதல் நாடாக இந்தியா இருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால், தற்போது நிலைமைகள் மாறி உள்ளூர் ஆயுதங்களைக் கொண்டே எந்த போரையும் வெல்லக்கூடிய வலிமையை நாம் பெற்றுள்ளதாகவும் ஜெனரல் பிபின்ராவத் உறுதிபட தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங், பாதுகாப்பு ஆலோசகர் திரு.அஜித்தோவல், முப்படை தளபதிகள் மற்றும் டி.ஆர்.டி.ஒ. இயக்குநர்கள் பங்கேற்றனர்.