தேசிய பாதுகாப்புப் படை நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்கிறது - அமித்ஷா
Oct 15 2019 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய பாதுகாப்புப் படை, நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தெரிவித்தார்.
ஹரியானா மாநிலம், Manesar நகரில் தேசிய பாதுகாப்புப் படை தோற்றுவிக்கப்பட்டதன் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். அதில், பாதுகாப்புப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை திரு. அமித்ஷா ஏற்றுக்கொண்டார். அப்போது நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியையும் அவர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு.அமித்ஷா, நாட்டில் தீவிரவாதத்தை வேரறுக்கவே, ராணுவத்தை போன்ற கட்டமைப்புடன் தேசிய பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது என்றும், இப்படை நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.