தரமற்ற குடிநீரால் ஏற்படும் நோய்களைத் தடுக்க முயற்சி : நாடு முழுவதுமுள்ள வீடுகளுக்‍கு விநியோகிக்கப்படும் நீரின் தரத்தை அறிய மத்திய அரசு உத்தரவு

Oct 15 2019 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

தரமற்ற குடிநீரை குடிப்பதால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் முயற்சியாக, நாடு முழுவதுமுள்ள வீடுகளுக்‍கு விநியோகிக்கப்படும் நீரின் தரத்தை அறிய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலக தரநிர்ணய நாளையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நுகர்வோர் நலன் துறை அமைச்சர் திரு. ராம்விலாஸ் பாஸ்வான் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், டெல்லியின் 11 இடங்களில் குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில், தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்த அளவைவிட, தண்ணீரின் தரம் மோசமாக இருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து நாடு முழுவதும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைத்துள்ள குடிநீர் தரத்தை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும், 6 மாதங்களில் இந்த ஆய்வு அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் பாஸ்வான் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00