சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு - கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
Oct 15 2019 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டவிரோத பணப் பறிமாற்ற வழக்கில், கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். பின்னர், டெல்லி சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமின் மனுக்களை, டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அவர் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, டி.கே.சிவக்குமார் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், டி.கே.சிவக்குமாரின் நீதிமன்ற காவலை வரும் 25-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.