இந்த தீபாவளியை நமது பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணிப்போம் : சண்டிகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை
Oct 15 2019 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்த தீபாவளியை நமது பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணித்து, அவர்களின் சாதனைகளை கொண்டாடுவோம் என பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவைக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி சண்டிகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பிரதமர் திரு. மோடி உரையாற்றினார். கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் பணிக்காக, தான், ஹரியானா வரவில்லை என்றும், மக்களின் அன்பு, தன்னை தானாக அங்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்தார். இம்முறை தீபாவளியை நமது பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணித்து, அவர்களின் சாதனைகளை கொண்டாடுவோம் என பிரதமர் கூறினார். பெண் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்போம் என்றும் தெரிவித்தார். அண்மையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, தான் சந்தித்த போது, அவர், தங்கல் திரைப்படத்தில் இந்திய மகள்களின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக தெரிவித்ததாக குறிப்பிட்டார். சீன அதிபரின் கருத்து, ஹரியானாவை நினைத்து பெருமைப்பட வைத்ததாக பிரதமர் மோடி கூறினார்.