தாவுத் இப்ராஹிம் கூட்டாளிக்கு உதவியதாக எழுந்த புகார் - முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
Oct 15 2019 9:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் கூட்டாளி இக்பால் மிர்ச்சிக்கு நிலம் வாங்க உதவியதாக எழுந்துள்ள புகாரில், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல், வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் கூட்டாளியான இக்பால் மிர்ச்சி, கடந்த 2013-ம் ஆண்டு இங்கிலாந்தில் மரணமடைந்தார். இந்தியாவில் அவருக்கு 500 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந்தது. மும்பையின் வொர்லி பகுதியில், இக்பாலுக்கு சொந்தமாக உள்ள 15 மாடி வணிக வளாகத்தில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரபுல் படேலுக்கும், அவரது மனைவிக்கும் சட்ட விரோதமாக பங்கு அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, வரும் 18-ம் தேதி பிரபுல் படேல் விளக்கமளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.