பல்வேறு மாநிலங்களில் வரும் 21-ம் தேதி தேர்தல் : வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை
Oct 15 2019 9:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வரும் 21-ம் தேதியன்று, தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டப்பேரவைக்கும், நாங்குநேரி, விக்கிரவாண்டி உள்பட 17 மாநிலங்களிலுள்ள 51 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும், 21-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதே போன்று, பீகாரின் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், மகாராஷ்டிராவின் சட்டாரா நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு வரும் 21-ம் தேதி நடத்தப்பட்டு, 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவு நடைபெறும் 21-ம் தேதி, காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்துகணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.