காற்று மாசு தொடர்பாக தினமும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Oct 15 2019 9:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காற்று மாசு தொடர்பாக தினமும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் எச்சங்களை எரிப்பதால் காற்றில் ஏற்படும் மாசின் அளவு அதிகரித்து வருகிறது. சுமார் 70 சதவீதம் அளவுக்கு கார்பன் டை ஆக்சைட் காற்றில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் வந்தது. பயிர் எச்சங்களை அழிப்பதற்கான கருவிகள் விவசாயிகளுக்கு இல்லாததற்கு வேதனை தெரிவித்த தீர்ப்பாயம், காற்று மாசின் அளவு குறித்து தினமும் அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.