ஆந்திராவில் விவசாயிகளுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயை முதலீட்டு தொகையாக செலுத்தும் திட்டம்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
Oct 16 2019 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவில் விவசாயிகளுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயை முதலீட்டு தொகையாக செலுத்தும் திட்டத்தினை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
ஆந்திராவின் சிம்மபுரியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில், நடைபெற்ற விழாவில் ரைத்து பரோசா என்னும் விவசாயிகளுக்கான முதலீட்டு திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது 2017ஆம் ஆண்டில் விவசாயிகள் படும் துன்பத்தைக் கண்டு அந்தாண்டு நடந்த கட்சி கூட்டத்திலேயே ரைத்து பரோசா திட்டத்தை கொண்டு வருவேன் என உறுதி அளித்ததாகவும், அதன்படியே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி மே மாதத்தில் 7 ஆயிரத்து 500 ரூபாயும், அக்டோபர் மாதத்தில் 4 ஆயிரம் ரூபாயும் சங்கராந்தி அன்று 2 ஆயிரம் ரூபாயும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார்.