மேற்கு வங்கத்தில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த துர்கா பூஜையில் ஆளுநருக்கு அவமதிப்பு : விழாவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என வேதனை
Oct 16 2019 2:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு வங்கத்தில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த துர்கா பூஜை நிகழ்ச்சியின் போது தான் அவமதிக்கப்பட்டதாக அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கார் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் துர்கா பூஜை நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டன. துர்கா பூஜைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மேற்குவங்கத்திலும் துர்கா பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கிடையில் அம்மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில், மேற்குவங்காள அரசு சார்பில் துர்கா பூஜை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநில அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மேற்கு வங்காள ஆளுநர் ஜகதீப் தங்கார் தனது அதிகாரிகளுடன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் போது ஜகதீப் தங்காருக்கு வழங்கப்பட்ட இருக்கை மேடையின் ஓரத்தில் இருந்ததாகவும், இதனால் அவர் துர்கா பூஜை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துர்கா பூஜை நிகழ்ச்சியின் போது சுமார் 4 மணி நேரம் மேடையில் அமர்ந்திருந்ததாகவும், ஆனால் தன்னை ஒரு ஓரமாக அமரவைத்து முழுவதும் இருட்டடிப்பு செய்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.