ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்‍கத்துறையும் ப. சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் - இன்று நடைபெற்ற விசாரணையில் முக்‍கிய முடிவு

Oct 16 2019 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், திஹார் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம், இன்று காலை விசாரணை நடத்திய அமலாக்‍கத்துறை, அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், சி.பி.ஐ., அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்ததை அடுத்து, அவர் நீதிமன்றக் காவலில், திஹார் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளார். இவ்வழக்‍கில் அமலாக்‍கத்துறையும், தனியாக வழக்‍குப்பதிவு செய்துள்ளது. சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், அதற்கு அனுமதி அளிக்‍குமாறு, டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்‍கத்துறை மனுதாக்‍கல் செய்தது.

மனு மீது விசாரணை நடத்திய டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், ப.சிதம்பரத்திடம் 30 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் கைது செய்து கொள்ளவும், அமலாக்‍கத்துறைக்‍கு அனுமதி வழங்கி நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து, திஹார் சிறையில் உள்ள சிதம்பரத்திடம், அமலாக்‍கத்துறை அதிகாரிகள் 3 பேர், இன்று காலை விசாரணை நடத்தினர். இதனையொட்டி, சிதம்பரத்தின் மகன் கார்த்தி மற்றும் மனைவி நளினி, திஹார் சிறை விரைந்தனர். இந்த நிலையில் சிதம்பரத்தை கைது செய்ய, அமலாக்‍கத்துறை, திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00