மும்பை பயங்கரவாத தாக்குதலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்காத காங்கிரஸ் ஆட்சி- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
Oct 19 2019 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பை பயங்கரவாத தாக்குதலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்காத காங்கிரஸ் ஆட்சி, தாக்குதலுக்கு காரணமானவர்களுடன் வியாபாரம் பேசிக்கொண்டு இருந்ததென பிரதமர் திரு. நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, 1993-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, நியாயம் வழங்கவில்லை என குற்றம்சாட்டினார். தாக்குதலை நடத்தியவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டதாக தெரிவித்த அவர், தாக்குதலுக்கு காரணமானவர்களுடன் ஆட்சியாளர்கள் வியாபாரம் செய்தனர் என கடுமையாக விமர்சித்தார். மும்பை தப்பியோடிய தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி இக்பால் மிர்சியுடன் நிலப்பரிவர்த்தனை பேரத்தில் தொடர்பு இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் Praful Patel அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வருவதை மறைமுகமாக சுட்டிக்காட்டி, பிரதமர் திரு. மோடி விமர்சித்தார்.
மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.