மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பவில்லை - பிரதமர் மோடி குற்றச்சாட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைசி பதில்
Oct 19 2019 12:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு. மோடி கூறியுள்ளதைப்போல, மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் யாரும் தப்பித்துவிடவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிம் கட்சி தலைவர் திரு. ஒவைசி கூறியுள்ளார்.
மஹாராஷ்ட்ர மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அவுரங்காபாத் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து, பிரதர் திரு. மோடியின் கருத்துக்கு பதிலளித்தார்.
பிரதமர் திரு. மோடி கூறியுள்ளதைப்போல, மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் யாரும் தப்பித்துவிடவில்லை என்றும், யாகூப் மேமன் தூக்கிலடப்பட்டதாகவும், திரு. ஒவைசி கூறியுள்ளார்.
பிரச்சார உரையை முடித்துக்கொண்டு, மேடையில் இருந்து இறங்கிய ஒவைசி, தன் கட்சியின் சின்னமான, காற்றாடியை விடுவதைப்போல நடனமாடினார். ஒவைசியின் நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.