சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அமிதாப் பச்சன் - நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்
Oct 19 2019 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
1982-ம் ஆண்டு நடந்த படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் உடலில் மாற்று ரத்தம் செலுத்தப்பட்டது. அந்த ரத்தத்தில் "ஹப்படிட்டீஸ் பி" வைரஸ் இருந்ததால், அவரது கல்லீரல் 75 சதவீதம் செயலிழந்தது. இதன் காரணமாக கல்லீரல் பிரச்சனையால் அமிதாப் பச்சன் அவதிப்பட்டு வருகிறார்.
கடந்த செவ்வாய்கிழமை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமிதாப் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில், அமிதாப் பச்சன், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அமிதாப்பிற்கு நல்ல முறையில் சிகிச்சை முடிந்து, அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.