2022-ம் ஆண்டுக்கான இன்டர்போல் மாநாடு டெல்லியில் நடத்த ஒப்புதல் - இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பெருவாரியான நாடுகள் ஆதரவு
Oct 19 2019 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
Interpol எனப்படும் சர்வதேச காவல்துறையின் மாநாட்டை வரும் 2022-ம் ஆண்டு இந்தியாவில் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
Interpol அமைப்பின் 88-வது மாநாடு சிலி நாட்டின் தலைநகர் Santiago-வில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு பேசிய சி.பி.ஐ. இயக்குநர் ரிஷிகுமார் சுக்லா, 2022-ம் ஆண்டு 91-வது Interpol மாநாட்டை டெல்லியில் நடத்த அனுமதி கோரினார். இதற்கு மாநாட்டில் கலந்துகொண்ட பெருவாரியான நாடுகள் ஆதரவு அளித்து வாக்களித்தன. இதனைத் தொடர்ந்து, Interpol மாநாடு, டெல்லியில் 2022-ம் ஆண்டு நடைபெறுகிறது. ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் Interpol அமைப்பின் செயலாளர் ஜெனரல் Jurgen Stock, டெல்லியில் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவை சந்தித்தபோது, 2022-ம் ஆண்டு Interpol மாநாட்டை நடத்த இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.