கர்நாடகாவில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க நூதன முயற்சி - அட்டைப்பெட்டியால் முகத்தை மூடி தேர்வெழுத வைத்த கல்லூரி நிர்வாகம்
Oct 19 2019 2:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுப்பதற்காக கல்லூரி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நூதன நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் பெரும்பாலான மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி தேர்வுகளின்போது முறைகேடு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க நூதன முயற்சியை மேற்கொண்டது. அண்மையில் நடைபெற்ற கல்லூரி இடைக்கால தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க முகத்தை அட்டைப்பெட்டிக்கொண்டு மூடியவாறு தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் செய்துள்ளது. இது தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.