பஞ்சாப் - மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம் - வாடிக்கையாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது முதியவர் பலி - மயக்கமடைந்த இருவருக்கு தீவிர சிகிச்சை
Oct 19 2019 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப்-மகாராஷ்டிரா வங்கி முறைகேட்டால் தனது கணக்கில் இருந்து சிகிச்சைக்காக பணம் எடுத்து கொடுக்க முடியாமல்போன முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பை புறநகரான முலுண்டைச் சேர்ந்த 83 வயதான முரளிதர் தரா, பஞ்சாப் மஹாராஷ்ட்ரா வங்கியில் 80 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளளார். தராவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. ஆனால், பஞ்சாப் மஹாராஷ்ட்ரா வங்கியில் நடைபெற்ற கடன் முறைகேட்டை தொடர்ந்து, அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 40 ஆயிரம் ரூபாய்தான் எடுக்கமுடியும் என்று ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளதால், அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை, தராவின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க முடியவில்லை. இதனால் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் தரா பரிதாமாக உயிரிழந்துள்ளார். பஞ்சாப் மஹாராஷ்ட்ரா வங்கி பிரச்னை தொடர்பாக ஏற்பட்டுள்ள 4-வது உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.