தேசிய மற்றும் மாநில அளவிலான டி.என்.ஏ தகவல் வங்கிகளை உருவாக்க வகை செய்யும் தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா - நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறுபரிசீலனைக்கு பரிந்துரை
Oct 19 2019 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய மற்றும் மாநில அளவிலான டி.என்.ஏ தகவல் வங்கிகளை உருவாக்க வகை செய்யும் டி.என்.ஏ தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறு ஆய்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள குற்றவாளிகள், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்துக்கிடமானோர் ஆகியோரது டி.என்.ஏவை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தை அமைக்கும் டி.என்.ஏ. தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா கடந்த ஜூலை மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த மசோதா தற்போது மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. குறிப்பிட்ட நபர்களின் டி.என்.ஏ பதிவுகள் அடங்கிய டி.என்.ஏ தகவல் வங்கிகளை தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் அமைக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் தொடர்பான நிலைக்குழுவின் மறு பரிசீலனைக்காக, குடியரசுத் துணைதலைவர் திரு.வெங்கையா நாயுடு, பரிந்துரைத்துள்ளார். இந்த மசோதா தொடர்பாக, 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி நிலைக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.