மஹாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க ஆளுநர் கால அவகாசம் வழங்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல்
Nov 12 2019 6:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க ஆளுநர் திரு. பகத்சிங் கோஷாரி கால அவகாசம் வழங்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்துள்ளது.
மஹாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க நேற்று இரவு 7 மணி வரை சிவசேனாவுக்கு அவகாசம் அளித்திருந்த ஆளுநர் திரு. பகத்சிங் கோஷாரி, மேலும் 2 நாட்கள் அவகாசம் வேண்டும் என்ற அக்கட்சியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். மேலும், மஹாராஷ்ட்ராவில், குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் இன்று பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலையில், மஹாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க ஆளுநர் திரு. பகத்சிங் கோஷாரி கால அவகாசம் வழங்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்துள்ளது. சிவசேனா சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு. கபில் சிபல் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை, தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.