கேரளாவின் மரடு பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட மரடு குடியிருப்புகள் வரும் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் அகற்றம்
Nov 12 2019 7:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவின் மரடு பகுதியில், விதிகளை மீறி கட்டப்பட்ட மரடு குடியிருப்புகள், வரும் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் இடித்து அகற்றப்பட உள்ளன.
கேரள மாநிலம் மரடு பகுதியில், கடற்கரை மண்டல ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இழப்பீடு வழங்கப்பட்டதையடுத்து, குடியிருப்புவாசிகள் வீடுகளை காலி செய்தனர். இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, வரும் ஜனவரி மாதம் 11 மற்றும் 12 தேதிகளில் மரடு குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்படும் என கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11-ம் தேதி 2 குடியிருப்புகளும், 12-ம் தேதி 2 குடியிருப்புகளும் வெடி வைத்து தகர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.