நாடுமுழுவதும் ஆயிரத்து 800க்கும் அதிகமான தொண்டு நிறுவனங்களின் பதிவு அதிரடியாக ரத்து - வெளிநாட்டு நன்கொடைகளை பெற தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை
Nov 13 2019 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யாத ஆயிரத்து 807 தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிர்வாகங்களின் பதிவை, மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருடாந்திர வரவு-செலவு அறிக்கையை ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டப்படி, அறிக்கை தாக்கல் செய்யாததால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கான வருடாந்திர வரவு-செலவு அறிக்கையை இந்த நிறுவனங்கள் தாக்கல் செய்யவில்லை. இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடை பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.