ராகுல்காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு
Nov 14 2019 7:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை உச்சநீதிமன்றமே விமர்சித்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்து குறித்து, பா.ஜ.க. சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
ரஃபேல் ஒப்பந்த ஊழலில் பிரதமர் மோடியை திருடன் என்று உச்சநீதிமன்றமே கூறியதாக ராகுல் காந்தி விமர்சித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த பாரதிய ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணையில், ராகுல்காந்தி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், விளக்கம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இருந்தபோதிலும், விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்த உச்சநீதிமன்றம், ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, தனது நிலைப்பாடு குறித்து ராகுல் பதில் மனு தாக்கல் செய்ததுடன், நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரினார். இந்நிலையில், இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.