குடியரசுத் தலைவர் ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் 'சாம்னா' விமர்சனம்
Nov 14 2019 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்டிர மாநிலத்தில், அம்மாநில ஆளுநர் திரு. பகத்சிங் கோஷ்யாரி பரிந்துரையின்படி, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மஹாராஷ்டிர மாநிலத்தில், ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டத்தின்படி, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், மாநிலத்தில் இன்னமும், பா.ஜ.க.,விடம் தான் அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு விட்டதாக தேவேந்திர பட்னவிஸ் முதலைக்கண்ணீர் வடிப்பதாகக் குற்றஞ்சாட்டிய சிவசேனா கட்சி, தங்களுடைய கட்சி ஆட்சியமைக்க கூடுதல் அவகாசம் கோரிய போது, உரிய மரபு பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.