விழுந்து நொறுங்கியது "மிக்-29கே" போர் விமானம் - பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 விமானிகள் உயிர்தப்பினர்
Nov 16 2019 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவாவில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான மிக்-29கே ரக போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
கோவா கடற்கரைப் பகுதியில், இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக்-29கே போர் விமானத்தில், விமானிகள் இருவர் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, பறவை ஒன்று மோதியதில், விமானத்தின் வலதுபுற எஞ்சினில் தீப்பிடித்தது. இதைக் கண்ட விமானிகள் இருவரும் உடனடியாக பாராசூட் மூலம், கீழே குதித்து உயிர்தப்பினர். பின்னர், விமானம் எரிந்த நிலையிலேயே கீழே விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான மிக்-29கே போர் விமானம், பயிற்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியது என்றும், விமானிகள் இருவரும் பத்திரமாக தரையிறங்கி உயிர்தப்பிவிட்டதாகவும், கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வல் தெரிவித்தார்.