சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கும் தண்ணீர் குடிக்க தகுதியற்றது - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
Nov 17 2019 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட 14 நகரங்களில் கிடைக்கும் தண்ணீர் குடிக்க தகுதியற்றது என்று மத்திய அமைச்சர் திரு. ராம்விலாஸ் பஸ்வான் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஐதராபாத் உள்ளிட்ட 21 நகரங்களில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரிகளை, இந்திய தர நிர்ணய அமைப்பு ஆய்வு செய்தது. இதன் முடிவுகளை, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் உணவுத் துறை அமைச்சர் திரு. ராம்விலாஸ் பஸ்வான் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கும் தண்ணீர் குடிக்க தகுதியற்றதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பை மாநகராட்சியில் கிடைக்கும் தண்ணீர் பாதுகாப்பாக இருப்பதாகவும், தலைநகர் டெல்லியில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் மாசடைந்து நீரின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் ராம்விலாஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.