குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது - பா.ஜ.க.வை கடுமையாக சாடிய சிவசேனா
Nov 17 2019 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில், பா.ஜ.க., குதிரை பேரம் நடத்தி வருகிறது என்று பா.ஜ.க.,வை சிவசேனா கட்சி கடுமையாக சாடியுள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் வெளியிடப்படுள்ள செய்தியில், பா.ஜ.க., தலைவர் அமித் ஷா, மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டில் உள்ளிட்டோர், தங்கள் கட்சியிடம் 14 சுயேச்சைகள் உட்பட 119 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக கூறி வருகின்றனர் என்றும், பா.ஜ.க.,வின் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியாலும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்றும் தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், பெரும்பான்மை இல்லாத போதும் பா.ஜ.க., ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை சந்திக்க உள்ளதாக அக்கட்சி தலைவர்கள் கூறுகின்றனர் என்றும், அப்படியென்றால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு மட்டும் ஏன் பெரும்பான்மை இல்லாமல் போனது என்றும் சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
தற்போதுள்ள அரசியல் சூழலை பயன்படுத்தி பா.ஜ.க., மேட்ச் பிக்சிங் செய்து வருகிறது என்றும், மேட்ச் பிக்சிங் போன்று அரசியல் சூதாட்டத்தை, குதிரை பேரமாக பா.ஜ.க., நடத்தி வருகிறது என்றும், சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.