இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்களில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் : இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி தகவல்
Nov 19 2019 1:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்களில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் உள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி டி.வி.மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் தெரிவித்த அவர், தகவல் தொழில்நுட்பத் துறை வளா்ச்சியில் தற்போது மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார். இதனால், நடப்பாண்டில் அத்துறையில் நடுத்தர நிலையில் பணியாற்றி வரும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரையில் வேலையினை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது எனக் கூறினார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு ஏற்படுவது என்பது இயல்பானதே என்று தெரிவித்த அவர் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் வேலை இழப்போரில் 80 சதவீதம் பேருக்கும் மீண்டும் பணிவாய்ப்புகள் கிடைத்துவிடும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி டி.வி.மோகன்தாஸ் தெரிவித்துள்ளாா்.