பிரதமர் நரேந்திர மோடி - மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சந்திப்பு - இந்தியாவை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்ல பில்கேட்ஸ் பங்களித்து வருவதாக பிரதமர் கருத்து
Nov 19 2019 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உடனான சந்திப்பு சிறப்பாக இருந்ததாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு தொடர்பான பணிகளுக்கு தனது அறக்கட்டளை சார்பில், கல்வி, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக உலகம் முழுவதும் பில்கேட்ஸ் நன்கொடை அளித்து வருகிறார். இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தங்களது தொண்டு நிறுவனத்தின் சார்பில் நிறைவேற்றப்படும் நற்பணிகள் குறித்து விளக்கினார். இந்த சந்திப்பு குறித்து டிவீட் செய்துள்ள திரு. மோடி, நமது நாட்டை சிறந்த பாதைக்கு இட்டுச் செல்வதில், சிறப்பான பங்களிப்பை பில்கேட்ஸ் அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.