மத்திய பா.ஜ.க., அரசுக்கு எதிரான கண்டனப் பேரணி வரும் 30-ம் தேதி நடைபெறும் என காங்கிரஸ் அறிவிப்பு
Nov 19 2019 9:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பா.ஜ.க., அரசுக்கு எதிரான கண்டன பேரணி முன்கூட்டியே வரும் 30-ம் தேதி நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மத்திய பா.ஜ.க., அரசின் தவறான கொள்கையல் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல பிரச்னைகளை முன்நிறுத்தி பா.ஜ.க.வுக்கு எதிராக டெல்லியில் டிசம்பர் 14-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. நாடுமுழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் மாதம் போராட்டம் நடைபெறும் என்றும் அதன் தொடர்ச்சியாக டெல்லியில் டிசம்பர் மாதம் பேரணி நடைபெறும் என்றும் எற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டம் முன்கூட்டியே வரும் 30-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.